எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

குடும்ப வன்முறை - பாதிக்கப்பட்டவர்

குடும்ப வன்முறை பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பையும் அன்பையும் பறிக்கிறது.  இது சுயமரியாதை, குற்றஉணர்வு மற்றும் மனச்சோர்வின் கீழ்நோக்கிய சுழற்சிகளையும் உருவாக்குகிறது.  எங்கள் PUREMIND® குடும்ப வன்முறைத் தொகுதி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய வன்முறை ஏற்படுத்திய சேதங்களைக் குணப்படுத்த உதவுகிறது, அவர்களின் சுயமரியாதையை மீண்டும்பெற உதவுகிறது எதிர்மறையான வடிவங்களை விட்டுவிட்டு அவர்களுக்குத் தகுதியான மகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவுகிறது.

 சேதத்திலிருந்து விடுபடுதல்

குடும்ப வன்முறைக்குப்  பிறகு சுயமரியாதையை  மீட்டெடுத்தல்

எங்கள் PUREMIND® குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட  தொகுதியுடன்

குடும்ப  வன்முறையால்  பாதிக்கப்பட்டவர்கள் பயத்துடன்  வாழ்வது   மட்டுமல்லாமல், பெரும்பாலும்  குற்ற  உணர்வு,  சுய வெறுப்பு மற்றும்  சுய மதிப்பின்  குறைபாடு ஆகியவற்றுடன்  வாழ்கின்றனர்.  பாதிக்கப்பட்டவர்களில்  பெரும்பாலோர் வன்முறையில்  ஈடுபடுபவர்களை  நேசிப்பதும் தொடர்கிறது,  மேலும்  யாரும்,  எப்போதும் வன்முறைக்குத்  தகுதியானவர்கள்  அல்ல, குறிப்பாக  நேசிப்பவரிடமிருந்து,  இதனைப் பலர்  புரிந்து கொள்ளத்  தவறுகிறார்கள்.   எங்கள் PUREMIND® குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தொகுதி குடும்ப வன்முறையால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் சுயமரியாதை  மற்றும்  மதிப்பு உணர்வுக்கு  வன்முறை  செய்த சேதத்தை அடையாளம்  காண  உதவுகிறது.   கடந்த காலத்துடன்  தொடர்புடைய  எந்தவொரு  குற்ற உணர்ச்சியையும்  சுய  வெறுப்பையும் விட்டுவிடவும்,  அவர்கள்  மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும்  தகுதியானவர்கள் என்பதையும்  புரிந்துகொள்ளவும்  இது  உதவுகின்றது.   உளவியல் சிகிச்சை மற்றும்  விஆர்  ஆகியவற்றின்  சக்திவாய்ந்த  கலவையைப்  பயன்படுத்தி,  எதிர்மறையான வடிவங்களை  அடையாளம்  கண்டு  நிவர்த்தி செய்யவும்,  வன்முறை  அவர்களுக்கு ஏற்படுத்திய சேதத்திலிருந்து  விடுபட்ட   எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தவும்  (மாட்யூல்)   இந்தத் தொகுதி அவர்களுக்கு உதவுகிறது.   வாடிக்கையாளர்கள்  மீண்டும் தங்களை  நேசிக்கக்கூடியவராக   தொகுதியிலிருந்து வெளிவருகிறார்கள்  மற்றும்  குற்றவாளியுடன் சேர்ந்தோ அல்லது  இல்லாமலோ  சிறந்த  வாழ்க்கையை  எதிர் நோக்குகிறார்கள்.